வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 15 ஜூலை 2021 (08:22 IST)

இங்கிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா!

கிரிக்கெர் தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி தலைமையில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி வீரர்களில் இருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கேப்டன் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணியை சேர்ந்த இருவருக்கு லேசான அறிகுறிகள் தெரிய வந்ததையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருவருக்கு அறிகுறிகள் தெரிந்த நிலையில் சோதனையில் ஒருவருக்கு கொரோனா நெகட்டிவ் உறுதியாகியுள்ளது. இதனால் இருவருமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பாதுகாப்புடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.