1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India vs Ireland third t 20 abondoned

மழையால் கைவிடப்பட்ட மூன்றாவது டி 20 போட்டி … தொடரை வென்ற இந்தியா!

இந்தியா
இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல்  இரண்டு டி 20 போட்டிகளை இந்திய அணி வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்தியா வென்றது.

இந்நிலையில் நேற்று டப்ளின் நகரில் மூன்றாவது டி 20 போட்டி நடக்க இருந்த நிலையில் மழைக் குறுக்கிட்டதால் ஒரு பந்து கூட வீச முடியாத நிலையில் போட்டி கைவிடப்பட்டது.

இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்திய அணி அடுத்து ஆசியக் கோப்பை தொடரில் விளையாட உள்ள நிலையில் இந்த தொடர் இளம் வீரர்களுக்கு நல்ல பயிற்சியாக அமைந்தது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்… இந்தியாவுடன் மோதும் இரண்டு அணிகள்!