1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 22 நவம்பர் 2022 (16:15 IST)

மழையால் கைவிடப்பட்ட போட்டி… வெற்றி யாருக்கு? டி ஆர் எஸ் முறையில் முடிவு அறிவிப்பு

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து அந்த அணி 19.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 9 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 75 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் இழந்து விளையாடும் போது மழை குறுக்கிட்டு போட்டி நிறுத்தபட்டுள்ளது. இந்நிலையில் டி ஆர் எஸ் விதிப்படி 9 ஓவர்களில் 75 ரன்கள் சேர்க்க வேண்டும். இந்திய அணியும் 75 ரன்கள் சேர்த்துள்ளது.

இதையடுத்து மழைக் காரணமாக போட்டி கைவிடப்பட்ட நிலையில் போட்டி டை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.