தொடர்புடைய செய்திகள்
- “ஏன் சஹாலுக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பில்லை…” தினேஷ் கார்த்திக் பதில்!
- கர்மா விளையாடிவிட்டது… கோலியை நீக்கிய தேர்வுக்குழுவே காலி… பிசிசிஐ அதிரடி முடிவு
- 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் எந்த அணி வெல்லும்- பிரபல வீரர் கணிப்பு
- சூரிய கிரகண நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்தது!
- இந்தியா-நியூசிலாந்து முதல் டி20 போட்டி ரத்து: அதிகாரபூர்வ அறிவிப்பு
டி 20 அணிக்கு ஹர்திக்கைக் கேப்டனாக்க முடிவா?... பிசிசிஐ ஆலோசனை!
டி 20 அணிக்கு முழு நேர கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவுக்கு சேத்தன் சர்மா தலைமை வகித்து வந்தார். இவர்கள் தேர்வு செய்த அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால் இவர்கள் மேல் விமர்சனம் இருந்தது. இந்நிலையில் இப்போது சேத்தன் சர்மா உள்ளிட்ட மொத்த தேர்வுக்குழுவும் கலைக்கப்பட்டுள்ளதை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இந்த அதிரடி முடிவை அடுத்து இந்திய டி 20 அணிக்கு முழு நேர கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இது குறித்த அறிவிப்பு வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.