1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ganguly prediction on world cup semi finalist teams

அரையிறுதிக்கு செல்லும் அணிகள் இவைதான்… கங்குலி கணிப்பு!

இந்தியா
இந்தியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் அக்டோபர் 15 ஆம் தேதி நடக்க உள்ளது. இப்போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளோடு ஒரு போட்டியில் மோதி மொத்தம் 9 போட்டிகளை விளையாடும். அதில் அதிக புள்ளிகள் பெறும் நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் விதமாக போட்டி அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் என அணிகள் என இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளையும் நியுசிலாந்து அல்லது பாகிஸ்தான் ஆகிய அணிகளில் ஒரு அனியும் இடம்பெறும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
விராட் கோலிக்கு மீண்டும் கேப்டன் பதவி ? தேர்வுக்குழு முன்னாள் தலைவர் கருத்து