1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. fans upset over the action of RCB

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

ஆர் சி பி
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் உள்ளது. கர்நாடகாவில் ஆர் சி பி அணிக்கு ஏகோபித்த ஆதரவு உள்ளது. ஆனால் ஆர் சி பி அணி செய்த ஒரு செயலால் தற்போது அம்மாநில ரசிகர்களிடம் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

ஆர் சி பி இந்தி ரசிகர்களைக் கவரும் விதமாக இந்தியில் சமூகவலைதளக் கணக்குகளைத் தொடங்கியது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் தற்போது இந்தி எதிர்ப்புக்கு எதிரானப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் ஆர் சி பி அணியின் இந்த செயல் ரசிகர்களைக் கோபமடையச் செயதுள்ளது.  மேலும் அம்மாநில கலாச்சார அமைச்சகம் இது சம்மந்தமாக விளக்கம் கேட்டு அணி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!