1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (10:40 IST)

முதல் இன்னிங்ஸிலேயே பட்டையை கிளப்பிய இங்கிலாந்து! – சமாளிக்குமா இந்தியா?

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலேயே அதிகமான ரன்களை குவித்துள்ளது இந்தியா.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸை வெற்றிகரமாக தொடங்கிய இங்கிலாந்து அணி 190 ஓவர்கள் வரை விளையாடியது. இந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக ஜோ ரூட் இரட்டைசதம் அடித்து சாதனை புரிந்தார்.

சிப்ளி 86 ரன்கள் வரை ஸ்கோர் செய்ய மற்றவர்கள் 30க்கும் அதிகமாக ரன்களை எடுத்தனர். இதனால் 190 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 578 ரன்களை பெற்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவதாக களம் இறங்கியுள்ள இந்திய அணி ஆரம்பமே ரோகித் சர்மா விக்கெட் பறிபோனதால் திணறி வருகிறது.