1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 31 டிசம்பர் 2022 (09:47 IST)

ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு நற்கருணை வீரர் விருது!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் நேற்று அதிகாலை காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்துள்ளது. இந்நிலையில் ரிஷப் பண்டிற்கு படுகாயங்கள் ஏற்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளார்.

இந்நிலையில் அவரைக் காப்பாற்றிய ஓட்டுனர் சுஷில் குமார் உள்ளிட்ட பொதுமக்களுக்கு நற்கருணை வீரர் விருது அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பண்ட்டைக் காப்பாற்றிய ஓட்டுனர் சுஷில் குமார் தனக்கு பண்ட் யார் என்பதே தெரியாது எனக் கூறியுள்ளார். மேலும் இப்போது அவர் நலமாக இருப்பது மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.