தொடர்புடைய செய்திகள்
- 2011 ஆம் ஆண்டு உலககோப்பை… போட்டிகளுக்கு முன்னர் வீரர்களுக்கு உடலுறவு ஆலோசனை – சர்ச்சையைக் கிளப்பும் புத்தகம்!
- அப்பா.. ஜெர்மனி தோத்து போச்சுப்பா..! – கதறி அழுத சிறுமிக்கு ஆன்லைனில் திரண்ட நிதி!
- கால் இறுதியில் கலக்கிய அணிகள்; அரையிறுதியில் யார்? யார்? – ஈரோ உலகக்கோப்பை!
- சிவகார்த்திகேயன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
- ரூ.17 லட்சம் மின்கட்டணம் செலுத்தாத அரசியல் பிரபலம்
மனைவிகளை கிரிக்கெட் பேட்டுடன் ஒப்பிட்டு பேசியதால் சர்ச்சை! – மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்!
தொலைக்காட்சி கிரிக்கெட் வர்ணனையில் தினேஷ் கார்த்திக் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இங்கிலாந்து – இலங்கை இடையிலான ஒருநாள் தொடர் நடந்து வரும் நிலையில் அந்த போட்டியை கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக தொகுத்து வருகிறார். இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது கிரிக்கெட் பேட்டை மற்றவர்கள் மனைவியுடன் அவர் தொடர்பு படுத்தி நகைச்சுவையாய் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ள தினேஷ் கார்த்திக் “நான் பேசிய பேச்சுக்கு இப்போது அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். உண்மையில் எந்த உள்நோக்கத்துடன் அப்படி பேசவில்லை. ஆனால், அவ்வாறு பேசியது தவறுதான். ஒவ்வொருவரிடமும் இதற்காக மன்னிப்புக் கோருகிறேன். நிச்சயமாக அந்த வார்த்தை சரியானது அல்ல. இதுபோல் மறுபடியும் நடக்காது. ” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்