1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Csk doors always opened for dhoni says csk ceo

தோனி விரும்பும்வரை சி எஸ் கே அணியின் கதவுகள் திறந்தே இருக்கும்… காசி விஸ்வநாதன் பேட்டி!

தோனி
42 வயதாகும் தோனி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இதுதான் அவரின் கடைசி ஐபிஎல் என எதிர்பார்ப்பு எழுந்து, ஆனால் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். கடந்த சீசனோடு அவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சி எஸ் கே அணியால் அவர் அன்கேப்ட் ப்ளேயராக 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

ஆனால் தோனி அடுத்த ஆண்டு மட்டும் விளையாடுவாரா அல்லது தொடர்ந்து சில ஆண்டுகள் ஆடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காஸி விஸ்வநாதன் “தோனி விரும்புவரை அவருக்காக சி எஸ் கே அணிக் கதவுகள் திறந்திருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தற்போது ஐபிஎல் விளையாடும் வீரர்களில் தோனிதான் அதிக வயதான வீரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
அடுத்தடுத்து இரண்டு சதம்… இந்திய வீரர்கள் யாரும் படைக்காத சாதனையை நிகழ்த்திய சஞ்சு!