1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (16:21 IST)

இந்திய வீரர் அஸ்வினுக்கு கொரொனா உறுதி!

இந்தியாவில் சில மாதங்களாகக் குறைந்து வந்த கொரொனா தொற்று சிய நாட்களாக அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு கொரொனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,  நடிகர், நடிகைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சத்திரனுக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே,அஷ்வின் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இங்கிலாந்தில் நடைபெறும் 5 வது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகிறது.