1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (23:51 IST)

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரொனா உறுதி

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்தது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

இதில், விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் அணி தோல்வியைத் தழுவியது. இதனால், விராட் கோலி கேப்டன்சிப் பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து,  கே.எஸ்.ராகுல் இந்திய ஒரு நாள் அணிக்கு கேப்டன் ஆனார். ஆனால் ஒரு நாள் தொடரிலும் இந்திய அணி தோற்றது.

இ ந் நிலையில், இந்திய வீரர்கள், தவான், ஸ்ரேயாஷ் அய்யர், ருத்துராஜ்,  நவ்தீப் சைனி ஆகியோருக்கு கொரொனா தொற்று உறூதி செய்யப்பட்டுள்ளது.  இது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.