வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 5 செப்டம்பர் 2020 (08:45 IST)

என் வாழ்நாளின் மோசமான நாட்கள்- புலம்பி தள்ளிய அஸ்வின்!

இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் துபாயில் தனிமைப்படுத்திக் கொண்ட நாட்களைப் பற்றி பேசியுள்ளார்.

இந்தியாவில் நடக்கவேண்டிய ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக துபாயில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடக்க உள்ளன. இதற்காக 8 அணியைச் சேர்ந்த வீரர்களும் துபாய்க்கு சென்று, தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

டெல்லி அணிக்காக விளையாட உள்ள அஸ்வின், ’இந்த 6 தனிமைப்படுத்தும் நாட்களும் மிக மோசமானவை எனத் தெரிவித்துள்ளார். இந்த  6 நாட்களில் நான் வழக்கத்துக்கு மாறாக 6 மணிநேரம் வரை மொபைல் போன் பயன்படுத்தினேன். என்னால் புத்தகங்கள் கூட படிக்க முடியவில்லை’ எனக் கூறியுள்ளார்.