1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ashwin talked about quarantine days

என் வாழ்நாளின் மோசமான நாட்கள்- புலம்பி தள்ளிய அஸ்வின்!

அஸ்வின்
இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் துபாயில் தனிமைப்படுத்திக் கொண்ட நாட்களைப் பற்றி பேசியுள்ளார்.

இந்தியாவில் நடக்கவேண்டிய ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக துபாயில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடக்க உள்ளன. இதற்காக 8 அணியைச் சேர்ந்த வீரர்களும் துபாய்க்கு சென்று, தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

டெல்லி அணிக்காக விளையாட உள்ள அஸ்வின், ’இந்த 6 தனிமைப்படுத்தும் நாட்களும் மிக மோசமானவை எனத் தெரிவித்துள்ளார். இந்த  6 நாட்களில் நான் வழக்கத்துக்கு மாறாக 6 மணிநேரம் வரை மொபைல் போன் பயன்படுத்தினேன். என்னால் புத்தகங்கள் கூட படிக்க முடியவில்லை’ எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
2020 ஐபிஎல் அட்டவணை வெளிட்யீடு ! டிரெண்டிங் ஆகும் ஹேஸ்டேக்