1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (09:01 IST)

எதிர்ப்பாளர்களின் கோட்டையில் கொடியேற்றிய தாலிபன்கள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வடகிழக்கே அமைந்துள்ள பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் திங்களன்று தாலிபன்கள் தங்களது கொடியை ஏற்றியுள்ளனர்.

கொடியேற்றுவதைக் காட்டும் காணொளி என்று கூறி ஒரு காணொளியும் தாலிபன் தரப்பால் வெளியிடப்பட்டுள்ளது.
 
ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு முன்னணி எனும் கிளர்ச்சிக் குழு, தாலிபன் ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததால் பஞ்ஷீர் பள்ளத்தாக்கு மட்டும் தாலிபன்களின் வசம் வராமல் இருந்தது.
 
தற்போது அந்த இடத்தையும் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக தாலிபன்கள் அறிவித்துள்ளனர்.
 
எனினும் தாங்கள் முக்கியமான நிலைகள் அனைத்திலும் இன்னும் இருப்பதாகவும் தொடர்ந்து சண்டையிடுவோம் என்றும் ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளது.
 
தேசிய அளவில் தாலிபன்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டும் என்றும் அந்த அமைப்பின் தலைவர் அகமது மசூத் வலியுறுத்தியுள்ளார்.
 
மலைப் பாங்கான பிரதேசமான பஞ்ஷீர் பள்ளத்தாக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மிகச்சிறிய மாகாணங்களில் ஒன்றாகும்.