செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (17:54 IST)

முதல் போட்டியில் ஜடேஜா விளையாடுவது உறுதி: சிஎஸ்கே நிர்வாகி பேட்டி

ஏப்ரல் 9ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஏப்ரல் 10-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ஜடேஜா களமிறங்குவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி ஒருவர் பேட்டி அளித்துள்ளார்
 
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது தெரிந்ததே. அவர் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் டெஸ்ட் தொடரின்போது காயமானார். இதனையடுத்து அவர் சிகிச்சை பெற்றதால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் விளையாடவில்லை. தற்போது அவர் முழுமையாக குணம் அடைந்து முழு தகுதி பெற்றுள்ளார் 
 
இந்த நிலையில் தற்போது அவர் சிஎஸ்கே அணியில் விளையாடுவதற்காக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் நிர்வாகி ஒருவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது ’ஜடேஜா தற்போது முழு அளவில் போட்டிக்கு தயாராகி விட்டார் என்றும், பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெறும் டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே அணியில் அவர் விளையாடுவார் என்றும் கூறியுள்ளார். நீண்ட இடைவேளைக்குப் பின் ஜடேஜாவின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்