1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sathyaraj speech about hindi and periyar

கேரளாவில் வேலைக்கு செல்ல இந்தி எதுக்கு கத்துக்கணும்: சத்யராஜ்

Sathyaraj
இந்தி மாநிலங்களில் வேலைக்கு சென்றால் ஹிந்தி கற்றுக் கொள்ளலாம், ஆனால் கேரளாவில் வேலைக்கு செல்வதற்காக ஹிந்தி எதற்காக கற்றுக்கொள்ள வேண்டும் என நடிகர் சத்யராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்
 
தந்தை பெரியார் அவர்கள் தமிழ் ஆங்கிலம் ஆகிய இரண்டையும் நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் என்றும் ஆங்கிலத்தை கற்றுக் கொள்ளாவிட்டால் இந்தி உள்ளே புகுந்து விடும் என்பதால் தான் அவர் அவ்வாறு கூறினார் என்றும் சத்யராஜ் கூறினார் 
 
வேலை நிமித்தமாக எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் அந்த மாநிலத்தின் மொழியை கற்றுக்கொள்வது அவசியம் என்றும் குறிப்பாக வட மாநிலத்திற்கு வேலைக்கு சென்றால் நீங்கள் சொல்லாமலேயே நாங்கள் இந்தி கற்றுக் கொள்வோம் என்று சத்யராஜ் கூறினார். ஆனால் அதே நேரத்தில் நான் கேரளாவில் வேலைக்கு செல்வதற்கு எதற்காக இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவருடைய இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
1 - 5 ஆம் வகுப்புக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை?