பதவி சுகத்துக்காக அலைந்தால் காலம் காறிதுப்பிவிடும்!. அப்போதே அரசியல் பேசிய பாரதிராஜா!..

வியாழன், 11 ஜூன் 2026 (13:00 IST)
மறைந்த இயக்குனர் பாரதிராஜாவை திரைப்பட இயக்குனர் என்கிர வட்டத்திற்குள் மட்டும் அடைத்து விட முடியாது. அவர் ஒரு சமூக போராளியாகவும் இருந்தார். நடப்பு அரசியலை தனது திரைப்படங்களிலும் பிரதிபலித்திருக்கிறார். அவர் இயக்கிய என்னுயிர் தோழன் திரைப்படத்தை பார்த்தால் அது புரியும்..
 
அரசியல் கட்சிகள் ஒரு அடிமட்ட தண்டனை எப்படி நடத்துகிறது என்பதை அந்த படத்தில் அவ்வளவு தெளிவாக காட்டியிருப்பார். அதேபோல் அவரின் பல படங்களிலும் அரசியல் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அது மட்டுமல்லாமல் தன்னுடைய திரைப்படங்களில் சாதி எதிர்ப்பையும் தொடர்ந்து அவர் பதிவு செய்து வந்தார். வேதம் புதிது, அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்கள் அதற்கு முக்கிய சாட்சி..
 

அரசியல்வாதிகளை எடுத்துக் கொண்டால் கலைஞர் கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் ஆகிய இருவருடன் நெருக்கமாக பழகியவர்தான் பாரதிராஜா, பாரதிராஜாவின் திரைப்படங்களை தொடர்ந்து பாராட்டி வந்தார் எம்ஜிஆர்.

2002ம் வருடம் பாரதிராஜா கொடுத்த பேட்டியில் ‘பதவி சுகத்துக்காக அலைகிற யாரும் பொதுவாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.. காலத்திற்கும் நிலைத்து நிற்பது போல் ஆக்கபூர்வமாக செயல்பட்டால் மட்டுமே இங்கு யாராக இருந்தாலும் மரியாதை.. இல்லையென்றால் காலம் காரி துப்பிவிடும்’ என அப்போதே மிகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார் பாரதிராஜா.

எல்லாம் காட்டு

குட்கா வழக்கு!. 12 வாரம்தான் டைம்!.. விஜய பாஸ்கருக்கு நீதிமன்றம் நெருக்கடி..

கொள்கை தலைவர்னு சொன்னா போதுமா?!.. விஜயை விளாசிய சத்யராஜ்!..

இனிமே டெலிகிராமில் படம் டவுண்ட்லோட் பண்ண முடியாது!.. ஆக்‌ஷனில் இறங்கிய மத்திய அரசு..

இன்னும் 5 எம்.எல்.ஏக்கள்!. நான் பாத்துக்குறேன்!.. தவெகவிடம் சொன்ன சி.விஜயபாஸ்கர்

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி!.. செந்தில்பாலாஜிக்கு போலீஸ் சம்மன்!...

அடுத்த கட்டுரையில்
Show comments