ஸ்ட்ரைக் வாபஸ்: நாளை முதல் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும்

திங்கள், 18 ஜூலை 2022 (15:46 IST)
தனியார் பள்ளிகள் நாளை முதல் இயங்காது என போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தனியார் பள்ளிகள்  அறிவித்துள்ளன. 
 
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடப்பட்டதை கண்டித்து நாளை முதல் தனியார் மெட்ரிக் நர்சரி பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் இயங்காது என தனியார் பள்ளிகள் தெரிவித்திருந்தது
 
இந்த நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோருடன் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து நாளை முதல் வழக்கம் போல் அனைத்து தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

எல்லாம் காட்டு

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments