12ஆம் தேதி பாராளுமன்றம் முன்பு ஈழத் தமிழர் தோழமைக் குரல் அமைப்பினர் போராட்டம்
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சிங்கள அரசை கண்டித்தும், இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தியும் வரும் 12ஆம் தேதி பாராளுமன்றம் முன்பு ஈழத் தமிழர் தோழமைக் குரல் அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர். இதற்காக அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் இன்று டெல்லி புறப்பட்டு சென்றனர்.
இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலைகளுக்கு எதிராக தன்னெழுச்சி பெற்றிருக்கும் மாணவர் கூட்டமைப்பு, படைப்பாளிகள், கலைஞர்கள், மனித உரிமைப் போராளிகள், பெண்கள் அமைப்பினர், பத்திரிகையாளர்கள், திருநங்கைகள், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் இணைந்து 'ஈழத் தமிழர் தோழமைக் குரல்' என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
கடந்த 1ஆம் தேதி நடந்த கூட்டத்தில், டெல்லி பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் (பிப்ரவரி 12ஆம் தேதி) பாராளுமன்றம் முன்பு பேரணி, மறியல் மற்றும் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி ஈழத் தமிழர் தோழமைக்குரல் அமைப்பினர் இன்று புதுடெல்லி புறப்பட்டு சென்றனர்.
ஈழத் தமிழர் தோழமைக் குரல் அமைப்பாளர்கள் லீனா மணிமேகலை, கு.வெங்கடாசலம், படைப்பாளிகள் சுகிர்தராணி, அஜயன்பாலா, மாலதிமைத்ரி, மாணவர் கூட்டமைப்பிலிருந்து 60 பேர் உட்பட மொத்தம் 150 பேர் சென்னையில் இருந்து ரயிலில் புறப்பட்டனர். இவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு வழியனுப்பி வைத்தார்.
இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலைகளுக்கு எதிராக தன்னெழுச்சி பெற்றிருக்கும் மாணவர் கூட்டமைப்பு, படைப்பாளிகள், கலைஞர்கள், மனித உரிமைப் போராளிகள், பெண்கள் அமைப்பினர், பத்திரிகையாளர்கள், திருநங்கைகள், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் இணைந்து 'ஈழத் தமிழர் தோழமைக் குரல்' என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
கடந்த 1ஆம் தேதி நடந்த கூட்டத்தில், டெல்லி பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் (பிப்ரவரி 12ஆம் தேதி) பாராளுமன்றம் முன்பு பேரணி, மறியல் மற்றும் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி ஈழத் தமிழர் தோழமைக்குரல் அமைப்பினர் இன்று புதுடெல்லி புறப்பட்டு சென்றனர்.
ஈழத் தமிழர் தோழமைக் குரல் அமைப்பாளர்கள் லீனா மணிமேகலை, கு.வெங்கடாசலம், படைப்பாளிகள் சுகிர்தராணி, அஜயன்பாலா, மாலதிமைத்ரி, மாணவர் கூட்டமைப்பிலிருந்து 60 பேர் உட்பட மொத்தம் 150 பேர் சென்னையில் இருந்து ரயிலில் புறப்பட்டனர். இவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு வழியனுப்பி வைத்தார்.
