சத்தியமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ளது தயிர்பள்ளத்தை சேர்ந்தவர்கள் ரங்கசாமி (43), மாரிச்சாமி (50). இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு பண்ணாரியில் நடந்த ஒரு திருமணத்திற்கு இருவரும் இருகர வாகனத்தில் சென்றனர்.திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டு பேரும் சத்தியமங்கலம் வந்து கொண்டிருந்தனர். அப்போது ராமபையலூர் பிரிவில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தில் மோதியது....