கருணாநிதி தலைமையில் அமைச்சரவை கூட்டம்
Publish: Tue, 3 Feb 2009 (12:54 IST)
Updated: Tue, 3 Feb 2009 (12:51 IST)
இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக தற்போதைய நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் 34வது அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.சென்னை தலைமைச் செயலகத்தில் 30 நிமிடம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நாளை நடத்த உள்ள பொது வேலை நிறுத்தம் குறித்து விவாதித்ததாக தெரிகிறது.