சென்னை: பணம், அதிகாரம், பலாத்காரம் ஆகியவற்றை பயன்படுத்தி கூட்டணிக்கு அரசியல் கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு தி.மு.க திருமங்கலம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி வெறும் மாயைதான் என்று தெரிவித்துள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அ.தி.மு.க கூட்டணி சேர்த்துக்கொண்டு தங்கள் பணத்தையும் செலவழித்துவிட்டு வெற்றி பெற்ற தொகுதியையும் இழந்துவிட்ட வேதனை தான் மிச்சம் என்று கூறியுள்ளார்.