முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருசெந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் தலங்களிலும் கந்தசஷ்டி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 3ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.