பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுத் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா கலந்துகொண்டு, சிறப்புத் திட்டங்களைத் துவக்கிவைக்கிறார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அ.இ.அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைகளில் உறுப்பினர்களாக இணைந்துள்ள இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும், கம்ப்யூட்டர் மையங்கள், கம்ப்யூட்டர் பயிற்சி, தையல் பயிற்சி, யோகா பயிற்சி, வாகன...