பா.ம.க. வழக்கறிஞர்கள் 5 பேர் விலகல்!
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த பா.ம.க. வழக்கறிஞர்கள் ஐந்து பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. வெளியேற்றப்பட்டது. இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த பா.ம.க. வழக்கறிஞர்கள் பாலு (கூடுதல் அரசு பிளீடர்), எம்.ஆர்.ஜோதி மணியன், கதிர்வேல், கோபிராஜ், கோபு ஆகியோர் தங்கள் ராஜினாமா கடிதத்தை அரசு தலைமை பிளீடர் ராஜா கலிபுல்லாவிடம் கொடுத்தனர்.
அந்த கடிதத்தில், பா.ம.க.- தி.மு.க. கட்சிகளின் கூட்டணி முறிந்த நிலையில் இனிமேலும் தி.மு.க. அரசில் வழக்கறிஞராக பணிபுரியவிரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. வெளியேற்றப்பட்டது. இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த பா.ம.க. வழக்கறிஞர்கள் பாலு (கூடுதல் அரசு பிளீடர்), எம்.ஆர்.ஜோதி மணியன், கதிர்வேல், கோபிராஜ், கோபு ஆகியோர் தங்கள் ராஜினாமா கடிதத்தை அரசு தலைமை பிளீடர் ராஜா கலிபுல்லாவிடம் கொடுத்தனர்.
அந்த கடிதத்தில், பா.ம.க.- தி.மு.க. கட்சிகளின் கூட்டணி முறிந்த நிலையில் இனிமேலும் தி.மு.க. அரசில் வழக்கறிஞராக பணிபுரியவிரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
