மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் உடலுக்கு முதல்வர் கருணாநிதி, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இன்று அஞ்சலி செலுத்தினர். பிரபல எழுத்தாளர் சுஜாதா நேற்று முன்தினம் உடல் நலக்குறைவினால் மரணமடைந்தார். அவரது 2 மகன்களும் அமெரிக்காவில் இருந்ததால், சுஜாதாவின் உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மகன்கள் திரும்பியதை அடுத்து சுஜாதாவின் உடல் சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வர பூங்கா அருகில் உள்ள அவரின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரின்...