ராமேஸ்வரத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம்!
சிறிலங்கா கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரை உடனடியாக மீட்க கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடந்த வியாழக்கிழமை அன்று மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது சிறிலங்கா கடற்படையினர் 3 படகுகளையும் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் 12 மீனவர்களை பிடித்து சென்றனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறிலங்கா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சிறிலங்கா கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 12 மீனவர்களையும் மத்திய- மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக மீட்க கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடந்த வியாழக்கிழமை அன்று மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது சிறிலங்கா கடற்படையினர் 3 படகுகளையும் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் 12 மீனவர்களை பிடித்து சென்றனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறிலங்கா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சிறிலங்கா கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 12 மீனவர்களையும் மத்திய- மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக மீட்க கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
