சமுதாயத்தில் அரவானிகள் புறக்கணிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (ஃபிக்கி) மகளிர் பிரிவு சார்பில் சென்னையில் அரவானிகளை சேர்த்துக்கொள்வதா, தவிர்ப்பதா என்ற கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் தலைமை வகித்த கனிமொழி பேசுகையில், அரவானிகள் பொதுவாக சமுதாயத்தில் மதிக்கப்படுவதில்லை. ஊனமுற்றோருக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்புகள், முன்னுரிமைகள் கூட அரவானிகளுக்கு அளிக்கப்படுவதில்லை என்று கூறினார். மருத்துவராகவோ, என்ஜினீயராகவோ ஆவதற்கு சாதாரண குழந்தைகளுக்கு...