பா.ஜ.க.விலிருந்து விலகினார் எடியூரப்பா!
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பா.ஜ.க.விலிருந்து திடீர் விலகியுள்ளது அக்கட்சியின் மூத்த தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஊழல் புகாரை தொடர்ந்து கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலக்கினார் பி.எஸ்.எடியூரப்பா. இதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வராக எடியூரப்பாவின் ஆதரவாளர் சதானந்த கெளடா நியமிக்கப்பட்டார். பின்னர் அவருடன் ஏற்பட்ட மோதலால் கட்சி மேலிடம் சதானந்த கவுடாவை நீக்கியது.
இதையடுத்து எடியூரப்பாவின் ஆதரவாளர் ஜெகதீஷ் ஷெட்டர் கர்நாடகா முதல்வராக நியமிக்கப்பட்டார். இதனால் சதானந்தா கவுடாவுக்கு கட்சி மேலிடம் மீது அதிருப்தியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் புதிய கட்சி தொடங்க போவதாக கூறி வரும் எடியூரப்பா மீது பா.ஜ.க. மேலிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சதானந்த கவுடா வற்புறுத்தி வந்தார்.
இதனிடையே, பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா இன்று அறிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க குறித்த எந்த கேள்விகளையும் என்னிடம் கேட்க கூடாது என்றார்.
ஏன் என்றால் நான் அந்த கட்சியிலேயே இல்லை. இனி என்னிடம் பா.ஜ.க குறித்து எந்த விதமான கேள்விக்ளையும் நீங்கள் கேட்க கூடாது என தெரிவித்தார்.
மேலும் விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாகவும், டிசம்பர் 10 ஆம் தேதி அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் எடியூரப்பா கூறினார்.
ஊழல் புகாரை தொடர்ந்து கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலக்கினார் பி.எஸ்.எடியூரப்பா. இதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வராக எடியூரப்பாவின் ஆதரவாளர் சதானந்த கெளடா நியமிக்கப்பட்டார். பின்னர் அவருடன் ஏற்பட்ட மோதலால் கட்சி மேலிடம் சதானந்த கவுடாவை நீக்கியது.
இதையடுத்து எடியூரப்பாவின் ஆதரவாளர் ஜெகதீஷ் ஷெட்டர் கர்நாடகா முதல்வராக நியமிக்கப்பட்டார். இதனால் சதானந்தா கவுடாவுக்கு கட்சி மேலிடம் மீது அதிருப்தியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் புதிய கட்சி தொடங்க போவதாக கூறி வரும் எடியூரப்பா மீது பா.ஜ.க. மேலிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சதானந்த கவுடா வற்புறுத்தி வந்தார்.
இதனிடையே, பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா இன்று அறிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க குறித்த எந்த கேள்விகளையும் என்னிடம் கேட்க கூடாது என்றார்.
ஏன் என்றால் நான் அந்த கட்சியிலேயே இல்லை. இனி என்னிடம் பா.ஜ.க குறித்து எந்த விதமான கேள்விக்ளையும் நீங்கள் கேட்க கூடாது என தெரிவித்தார்.
மேலும் விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாகவும், டிசம்பர் 10 ஆம் தேதி அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் எடியூரப்பா கூறினார்.
