1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
  6. 2ஜி அலைக்கற்றை முறைகேடு: ஆ.இராசா கைது செய்யப்பட்டார்

A Raja arrested by CBI | 2ஜி அலைக்கற்றை முறைகேடு: ஆ.இராசா கைது செய்யப்பட்டார்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு ஆஇராசா திமுக மபுக
FILE
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திவரும் மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ), தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவை கைது செய்துள்ளது.

இன்று காலை 4வது முறையாக டெல்லியில் உள்ள ம.பு.க. அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஆ.இராசா கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இராசாவுடன் முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் சித்தார்த் பெகுராவும், இராசாவின் முன்னாள் தனிச்செயலர் ஆர்.கே.சந்தோலியா மற்றும் அவரது சகோதரர் பெருமாள் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.