மும்பை : தெற்கு மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், ஓபராய், தாஜ் போன்ற ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் புதன்கிழமை இரவு பயங்கரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு மற்றும் தொடர் வெடிகுண்டுத் தாக்குதலில் 25 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதனால் மும்பை நகரமே பீதியில் உறைந்துள்ளது.