சட்டவிரோதமாக உடல் உறுப்புகள் மாற்றப்படுவதை தடுக்க கண் வங்கிபோல் உடல் உறுப்பு வங்கியை துவங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.ஜனவரி 24-ம் தேதி ஹரியானா மாநிலம் குர்கான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுநீரக திருட்டு நாடு முழுவதிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு, மத்திய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீல் பதிலளிக்கையில், சுகாதாரத்துறை அமைச்சகத்தின்கீழ், சட்டரீதியாக தேவையான...