தண்டனையை ரத்து செய்யக் கோரியும், பிணைய விடுதலை கோரியும் இந்தி நடிகர் சஞ்சய் தத் தாக்கல் செய்த மனுக்கள் வருகிற வெள்ளிக் கிழமை விசாரணைக்கு வருகிறது.மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, சஞ்சய் தத் புனே அருகே உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். தடா நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து...