இந்திய நர்ஸ் தூக்கு போட்டு இறந்தார், பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி
FILE
இள்வரசி கேட் மிடில்டன்னுக்கு உதவி புரிந்த இந்திய நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெசிந்தா தூக்கிலிருந்து மீட்கும் போது அவருக்கு உயிர் இருந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது எனபதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றும் அவர் இறப்பதற்கு முன்னால் மூன்று கடிதங்களை எழுதி வைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த கடிதத்தில் ஜெசிந்தா என்ன எழுதியுள்ளார் என்பது வெளியிடப்படவில்லை.
இங்கிலாந்து ராணி எலிசபெத், இளவரசர் சார்லஸ் ஆகியோர் பெயரால் மருத்துவமனைக்கு ஆஸ்ட்ரேலிய ரேடியோ நிறுவனம் ஒன்றிலிருந்து தொலைபேசியில் பேசி கேட்டின் உடல்னிலை பற்றிய தகவல்களை பெற்று, ரேடியோவில் பரபரப்பாக செய்தி வெளியிட்டனர். இந்த தொலைப்பேசி அழைப்பை எடுத்து பேசியவர் இந்தியாவை சேர்ந்த செவிலியர் ஜெசிந்தா சல்தன்ஹா.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஜெசிந்தா சல்தன்ஹாவுக்கு வயது 46. இவருக்கு கணவரும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். லண்டனில் உள்ள மன்னர் 7ம் எட்வர்டு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ரேடியோ ஜாக்கிகளுக்கு தகவல் அளித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு அருகில் உள்ள நர்ஸ்கள் குடியிருப்பில் ஜெசிந்தா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
ஜெசிந்தாவின் மரணம் கேள்விகுறியாக உள்ளதை அடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டது. இன்று வெளியாகியுள்ள அந்த பரிசோதனை அறிக்கையில் ஜெசிந்தா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
