பிலிப்பைன்ஸில் உணவு பஞ்சம்; 600 பேர் பலி, 1000 பேர் மாயம்
பிலிப்பைன்ஸ் மின்டானவ் தீவை போபா புயல் தாக்கியதில் இதுவரை 600 பேர் பலியாகியுள்ளனர். 1000 ௦௦௦பேர் மாயமாகியுள்ளனர். தற்போது உணவு பற்றாக்குறையால் மக்கள் பசியால் தவித்து வருகின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் போபா என்ற புயல் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் வீசி மின்டானவ் தீவை சின்னாபின்னமாக்கியது. சுரங்கத்தில் தண்ணீர் புகுந்ததால், அங்கிருந்த மண்ணுடன் வெள்ளத்தில் சிக்கி ஏறாளமானோர் மண்ணில் புதைந்து மாயமாகியுள்ளனர். இதுவரை போபா புயலுக்கு 600 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 1000 பேரின் நிலை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.
கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் ஏராளமானோர் மண்ணில் புதைந்துள்ளதால், மீட்பு பணிகள் மந்தமாகவே உள்ளன. உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் உணவு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கானோர் மின்டானவ் தீவில் பசியால் தவித்து வருகின்றனர். தங்களுக்கு உணவு வேண்டும் என்ற பதாகைகளோடு வீதியில் மக்கள் திரண்டுள்ளனர். "எங்கள் மீது கருணை காட்டுங்கள், தயவுசெய்து தானம் அளியுங்கள், எங்களுக்கு தேவை உணவு'' போன்ற வாசகங்களை கண்டு பிற பகுதி மக்கள் அவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வருகின்றனர்.
உள்துறை நிர்வாகம் மக்களுக்கு உதவி வந்தாலும், உணவு மற்றும் பற்றாக்குறையால் அரசோ உதவியின்றி தவித்து வருகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் போபா என்ற புயல் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் வீசி மின்டானவ் தீவை சின்னாபின்னமாக்கியது. சுரங்கத்தில் தண்ணீர் புகுந்ததால், அங்கிருந்த மண்ணுடன் வெள்ளத்தில் சிக்கி ஏறாளமானோர் மண்ணில் புதைந்து மாயமாகியுள்ளனர். இதுவரை போபா புயலுக்கு 600 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 1000 பேரின் நிலை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.
கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் ஏராளமானோர் மண்ணில் புதைந்துள்ளதால், மீட்பு பணிகள் மந்தமாகவே உள்ளன. உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் உணவு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கானோர் மின்டானவ் தீவில் பசியால் தவித்து வருகின்றனர். தங்களுக்கு உணவு வேண்டும் என்ற பதாகைகளோடு வீதியில் மக்கள் திரண்டுள்ளனர். "எங்கள் மீது கருணை காட்டுங்கள், தயவுசெய்து தானம் அளியுங்கள், எங்களுக்கு தேவை உணவு'' போன்ற வாசகங்களை கண்டு பிற பகுதி மக்கள் அவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வருகின்றனர்.
உள்துறை நிர்வாகம் மக்களுக்கு உதவி வந்தாலும், உணவு மற்றும் பற்றாக்குறையால் அரசோ உதவியின்றி தவித்து வருகிறது.
