தொடர்புடைய செய்திகள்
- மதிப்பெண் குறைந்தால் பெற்றோருக்கு அபராதம்: அடாவடி உத்தரவு போட்ட பள்ளி நிர்வாகம்
- பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டம் திடீர் வாபஸ்!
- அக்டோபர் 13-இல் நாடு முழுவதும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்!
- குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜெய் ; தண்டனை அளித்த நீதிபதி
- தோனி செய்வதை அப்படியே செய்யும் செல்ல நாய் - வைரல் வீடியோ
தெருவில் நாய் அசுத்தம் செய்தால் ரூ.5000 அபராதம்
இந்தூர் மாநிலத்தில் தெருவில் நாய் அசுத்தம் செய்தால் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி முடிவுசெய்துள்ளது.
நாட்டில் தூய்மையான நகரங்கள் என 434 நகரங்களின் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் மிக தூய்மையான நகரங்கள் பட்டியலில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. இந்தூரில் தூய்மையை காக்கும் வகையில் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலை மற்றும் தெருக்களில் அசுத்தம் செய்யும் நாய்களின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை மாநகராட்சி தெரிவித்துள்ளது. விரைவில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று பிகார் மாநிலத்தில் உள்ள ஜாமல்பூர் நகரில் தெருக்களில் அசுத்தம் செய்யும் நாய்களின் உரிமையாளர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
