பிரபல நாவல் ஆசிரியர் ராஜேஷ்குமார் எழுதிய திகில் நாவல்கள் தொடராக எடுக்கப்பட்டு கலைஞர் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர்கள் விசாரணை என்ற பெயரில் ஒளிபரப்பாகி ரசிகர்களுக்கு திகிலூட்டி வருகிறது. ராஜேஷ்குமாரின் நாவல்கள் ஒவ்வொன்றும் திகிலானவை, த்ரில்லானவை. நாவல்களை படிக்கும் போது ஏற்படும் திரில்லும், திகிலும் அவை டி.வி.தொடர்களாக தயாரிக்கப்படும் போது காணாமல் போய்விடும். ஆனால் விசாரணை தொடரை இயக்கும் சி.பிரபுவோ ராஜேஷ்குமாரின் நாவல்களுக்கு...