1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

பொங்கல் போட்டிக்கு தயாராகிற அஞ்சாதே!

பொங்கல் போட்டிக்கு தயாராகிற அஞ்சாதே!
சித்திரம் பேசுதடி படத்துக்கு அப்புறம் நீண்ட இடைவெளிவிட்ட இயக்குனர் மிஷ்கின் அதிரடியாக அடுத்த படமான அஞ்சாதே படத்தை முடித்துவிட்டார்.

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் ஜரூராக நடந்துகொண்டிருக்கின்றன.

எப்படியும் பொங்கலுக்கு கொண்டுவந்து விடுவது என்று உறுதியாக இருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு.

தவிர படத்தில் நரேன் தவிர இன்னும் இரண்டு ஹீரோக்கள் இருக்கிறார்கள். ஒருவர் புதுமுகம். இன்னொருவர் பிரசன்னா.

இவர் நடிக்கும் தகவ‌ல் கடைசிவரை யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக வைக்கப்போகிறார்களாம்.
About Writer
Webdunia