முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்குமா சிஎஸ்கே? – பஞ்சாப் அணியுடன் மோதல்

திங்கள், 25 ஏப்ரல் 2022 (08:35 IST)
இன்றைய ஐபிஎல் தொடரில் இரண்டாவது முறையாக பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதிக் கொள்ள உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் மும்முரமாக நடந்து வருகிறது. இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், பஞ்சாப் கிங்ஸ் அணி மோத உள்ளது. இந்த சீசனின் இந்த போட்டி மூலமாக இரண்டாவது முறையாக இரு அணிகளும் மோதிக் கொள்கின்றன.

முந்தைய ஆட்டத்தில் 180 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி, சென்னையை 126 ரன்னில் மடக்கியது. தற்போதைய நிலவரப்படி 7 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் அணி 7 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்று எட்டாவது இடத்தில் உள்ளது. தரவரிசையில் அருகருகே உள்ள இரண்டு அணிகளும் யார் முந்தி செல்வது என்பதில் இன்று பலத்த பலபரீட்சை செய்ய உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எல்லாம் காட்டு

இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி? ஹிண்ட் கொடுத்த பிசிசிஐ செயலாளர்

29 பந்தில் 97 ரன்கள்.. ஐதராபாத்தை அடித்து நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி... இறுதிக்கு தகுதி பெறுமா ராஜஸ்தான்?

80% மழைக்கு வாய்ப்பு.. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? எந்த அணிக்கு அதிர்ச்சி?

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments