தொடர்புடைய செய்திகள்
- திடீரென வெடித்த எரிமலை; ஒட்டு மொத்தமாய் மூழ்கிய தீவு!
- டோங்கா எரிமலை வெடிப்பு: சென்னையிலும் அதிர்வலைகள் பதிவானதால் பரபரப்பு
- பசிபிக் கடலில் எரிமலை வெடிப்பு; அமெரிக்காவுக்கு சுனாமி எச்சரிக்கை!
- கொரோனா வைரஸ்: தொங்கா தீவில் முதல் கொரோனா தொற்று - அந்நாட்டு அதிகாரிகள் கூறுவதென்ன?
- கொரோனா வைரஸ்: தொங்கா தீவில் முதல் கொரோனா தொற்று - அந்நாட்டு அதிகாரிகள் கூறுவதென்ன?
எரிமலை வெடிப்பு: சாம்பலை நீக்க மீட்பு குழுக்கள் தீவிர முயற்சி!
டோங்கா தீவின் விமானநிலையத்தில் படிந்துள்ள எரிமலைச் சாம்பலை நீக்க மீட்பு குழுக்கள் தீவிரமாக முயற்சி.
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான டோங்காவை சுற்றி பல குட்டி தீவுகள் உள்ளன. இந்நிலையில் குட்டி தீவுகளில் ஒன்றான ஹூங்கா டோங்காவில் கடந்த 15 ஆம் தேதி திடீரென எரிமலை வெடித்தது. இதனால் ஏற்பட்ட 15 மீட்டர் உயர சுனாமி அலைகள் சுற்றி இருந்த தீவுகளை தாக்கியது.
இதனால் மாங்கோ தீவு, ப்னோய்புவா தீவு, நமுகா தீவு உள்ளிட்ட பல தீவுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. 50 பேரை மட்டுமே மக்கள் தொகையாக கொண்ட மாங்கோ தீவு முற்றிலும் தரமட்டமாகி கடல் நீரில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் டோங்கா தீவின் விமானநிலையத்தில் படிந்துள்ள எரிமலைச் சாம்பலை நீக்க மீட்புதவிக் குழுக்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. டோங்கா தீவின் விமானநிலையத்தில் படிந்துள்ள எரிமலைச் சாம்பலை நீக்க மீட்புதவிக் குழுக்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.
எரிமலை வெடிப்பால் உண்டான புகை 20 கிலோ மீட்டர் உயரத்துக்கு எழும்பியது என்று டோங்கா அரசு தெரிவிக்கிறது.
