தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்காவை நெருங்கும் அதிபயங்கர ‘மில்டன்’ சூறாவளி! ப்ளோரிடாவை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்!
- இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தும்வரை ஓயமாட்டோம்! - அமெரிக்காவின் சபதம்!
- அமெரிக்கா விலிருந்து ஆலை கொண்டுவர முயற்சிக்கும் முதலமைச்சர்- அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க முயற்சிக்கவில்லைஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு!
- இஸ்ரேலும் ஈரானும் பள்ளிக் குழந்தைகள் சண்டையிடுகிறார்கள்: டொனால்ட் டிரம்ப்
- ஜோ படைன் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. கமலா ஹாரீஸ் பிறக்கும்போதே பைத்தியம்: டிரம்ப்
தேர்தலில் தோற்ற பிறகு புதினுடன் ரகசியமாக பேசினாரா டிரம்ப்? அதிர்ச்சி தகவல்
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற நிலையில், இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் போட்டியிட உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில், தோல்விக்கு பின்னர் அவர் ரஷ்ய அதிபர் புதினுடன் ஏழு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தற்போது வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய அதிபர் புதினுடன் பேசும்போது, தன்னுடைய உதவியாளர்களை கூட டிரம்ப் வெளியேறச் செய்துவிட்டு, புதினுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி அமெரிக்கா முழுவதும் காட்டுத்தீ போல பரவி வரும் நிலையில், டொனால்ட் டிரம்புக்கு எதிரான அலை வீசி வருகிறது என கூறப்படுகிறது. ஏற்கனவே, கமலா ஹாரிஸ் வெற்றி உறுதி என கூறப்படும் நிலையில், இந்த தகவல் காரணமாக டிரம்ப் தோல்வி உறுதி என கூறப்படுகிறது.
ஆனால், இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ள டிரம்ப், இதில் துளியும் உண்மை இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
