1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. The mother kill the crying children

அழுத குழந்தைகளின் மூச்சை அடக்கிய தாய் ...உல்லாசத்தினால் வந்த வினை!

The mother of the crying of the crying kids
அமெரிக்க நாட்டின்   டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள  தனியார் ஹோட்டலில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில்  பங்கேற்பதற்காகச் சென்ற அமாந்த ஹாகின் என்ற பெண் தன் இரு குழந்தைகளையும் காரில்  அழைத்துச் சென்றுள்ளார். 
அப்போது இரு குழந்தைகளும் ஓயாமல் அழுத வண்ணம் இருந்ததால் கோபமடைந்த அமாந்த ஹாகின், தன்னால் பார்டிக்கு செல்ல முடியாமல் போய் விடுமோ என்ற பயத்தில் இரு குழந்தைகளையும் பலமணி நேரம் காரிலேயே போட்டு அடைத்து வைத்துள்ளார். 
 
பின் பார்ட்டிக்கு நிம்மதியாகச் சென்ற அமாந்த ஹாகின் இரவு முழுவதும் உல்லாசமாக இருந்துவிட்டு விடியக் காலையில் தன் காரைத் திறந்து பார்த்துள்ளார். 
 
அப்போது தன் குழந்தைகள் இருவரும் மயக்கம் அடைந்திருப்பதாக நினைத்து அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.குழந்தைகளை பரிசோதித்த டாக்டர் குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்
 
இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிய அவர்கள் வந்து அமாந்த ஹாகினை விசாரித்தனர் . இறுதியில் தான், இருகுழந்தைகளையும் காரில் அடைத்துவிட்டு பல மணி நேரம் கழித்து வந்து திறந்து பார்த்த போது இப்படி மயங்கி இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறியிருக்கிறார். அதன் பின் போலீஸார் அமாந்த ஹாகினை கைது செய்தனர்.
 
பெற்ற தாயே குழந்தைகளைக் காரில் அடைத்துக்கொன்ற சம்பவம் டெக்சாஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.