1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. The fire crash in the hotel; 8 dead

விடுதியில் தீ விபத்து; 8 பேர் உயிரிழப்பு

போர்ச்சுகல்
போர்ச்சுகல் நாட்டில் உள்ள ஒரு ஓய்வு விடுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்திலிருந்து தப்பிக்க கூட்டநெரிசலில் சிக்கி சுமார் 8 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதிவாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
போர்ச்சுகல் நாட்டின் வில்லா நோவாடா ரெயின்ஹா நகரில் உள்ள ஒரு இரண்டு மாடி ஓய்வு விடுதியில் வார விடுமுறையை களிக்க பொதுமக்கள் கூடினர். அப்போது அங்கு எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் அலறியடித்து கொண்டு தீ விபத்திலிருந்து தப்பிக்க வெளியேறினர். இதன்காரணமாக அப்பகுதியில் கூட்டநேரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநேரிசலில் சிக்கி சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
 
இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறையை சந்தோஷமாக களிக்க வந்தவர்கள் இறந்ததால், அப்பகுதியே சோகமயமாக காணப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
நாகையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை