1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (15:29 IST)

தைவான் கடல் பகுதியில் சீனா ஏவுகணை வீச்சு: மீண்டும் ஒரு போரா?

china war
தைவான் கடல் பகுதியில் சீனா ஏவுகணை வீச்சு: மீண்டும் ஒரு போரா?
தைவான் கடல்பகுதியில் சீனா ஏவுகணை வீசியதாக வெளிவந்திருக்கும் தகவல் மீண்டும் ஒரு போர் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது
 
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் தைவான் நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதி முழுவதிலும் தனது போர்க் கப்பல்களை நிறுத்தி ஏவுகணையை சீனா அச்சுறுத்தும் வகையில் பயிற்சியை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது
 
 இதனால் சீனா மீண்டும் ஒரு போர் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் தைவானுக்கு வந்ததை கண்டிக்கும் வகையில் இந்த போர்ப் பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது