1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (09:20 IST)

விடுதலை புலிகளுக்கு விரைவில் விடுதலை! – இலங்கை பிரதமர் அறிவிப்பு!

Dinesh Gunawardane
இலங்கை சிறையில் கைதிகளாக உள்ள விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி மற்றும் போராட்டங்கள் காரணமாக இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்‌ஷேவும், பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்சேவும் பதவி விலகியதோடு நாட்டை விட்டும் வெளியேறினர்

இந்நிலையில் தற்போது நாட்டின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே, மற்றும் பிரதமராக தினேஷ் குணவர்த்தனே ஆகியோர் பதவியேற்று பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கையில் நடைபெற்ற போரில் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த பலர் சிறை பிடிக்கப்பட்டனர்.

அவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், அவர்களை விடுதலை செய்ய உள்ளதாக பிரதமர் குணவர்த்தனே தற்போது அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இலங்கை தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edited By: Prasanth.K