தொடர்புடைய செய்திகள்
- மிஷன் ககன்யான் தாமதமாகலாம் - இஸ்ரோ சிவன் !!
- ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்: என்ன காரணம்?
- ஒலியை விட எட்டு மடங்கு வேகம்; துல்லியமான தாக்குதல்! – ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை!
- ஃபைனல் ஸ்டேஜில் சோதனை: கொரோனா தடுப்பூசி கிடைப்பது எப்போது?
- ஜூலை 2021க்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி
அவசரம் காட்டும் ரஷ்யா; டெஸ்ட் ரிசல்ட் வராமலே தடுப்பூசி சக்சஸ்?
கொரோனா வைரஸுக்கு எதிராக இரண்டாவது தடுப்பூசியையும் உருவாக்கிவிட்டதாக ரஷிய அதிபர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், ரஷ்யா தனது ஸ்புட்னிக் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
முன்னதாக இந்த தடுப்பூசி மீது பல விமர்சனங்கள் எழுந்தாலும், பிறகு இது பாதுகாப்பானது என உலக சுகாதார அமைப்பே பாராட்டியுள்ளது. இதனோடு கொரோனாவுக்கு எதிராக செயல்படும் இரண்டாவது தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார்.
வெக்டர் ஆய்வு மையத்தின் “எபிவாகொரோனா” என்ற இந்த தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாகவும், அக்டோபர் 15-க்குள் இதனை பதிவு செய்யும் பணிகள் முடிய உள்ளதாகவும் அவர் முன்னரே தெரிவித்தார். இந்நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிராக இரண்டாவது தடுப்பூசியையும் உருவாக்கிவிட்டதாக ரஷிய அதிபர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ள போதும் இதன் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் இன்னும் துவங்கவில்லை. மேலும், முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் முடிவுகளும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
