வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 மார்ச் 2021 (13:42 IST)

செவ்வாய் கிரகத்திற்கு மேல் நாசாவின் ஹெலிகாப்டர்!

செவ்வாய் கிரகத்தில் சமீபத்தில் நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் தரையிறங்கிய நிலையில் அடுத்ததாக ஹெலிகாப்டர் பறக்கவிடப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தொடர்ந்து ஆய்வுகள் செய்து வரும் நிலையில் சமீபத்தில் செவ்வாயின் மேற்பரப்புகளை ஆய்வு செய்ய பெர்சவரன்ஸ் விண்கலம் அனுப்பப்பட்டது. சமீபத்தில் வெற்றிகரமாக பெரசவரன்ஸ் ரோவர் செவ்வாயில் தரையிறங்கியதுடன் புகைப்படத்தையும் அனுப்பியது.

இந்நிலையில் ரோவருடன் அனுப்பப்பட்ட சிறிய ரக ஹெலிகாப்டரான இன்ஜெனூட்டியை விரைவில் ஆக்டிவேட் செய்ய உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த இன்ஜெனூட்டி ஹெலிகாப்டரில் முதன்முறையாக விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்களின் முதல் விமானத்திலிருந்து ஒரு துணி கொண்டு வரப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜெனூட்டி ஹெலிகாப்டர் ஏப்ரல் 8ம் தேதிக்குள் ஆக்டிவேட் செய்யப்பட்டு செவ்வாய் கிரகத்தின் மேல்பரப்பில் பறக்கவிடப்படும் என நாசா தெரிவித்துள்ளது.