1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (21:31 IST)

பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்: இம்ரான்கான்

பிரதமர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்றும் இறுதிவரை போராடுவேன் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த முக்கிய அரசு கட்சியின் ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து அவரது அரசு பெரும்பான்மையை இழந்தது
 
இந்த நிலையில் இன்று இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு ஏப்ரல் மூன்றாம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் பிரதமராக இறுதிவரை போராடுவேன் என்றும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்றும் இம்ரான்கான்  தெரிவித்துள்ளார் 
 
நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் மேலும் கூறியபோது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நம்பிக்கையுடன் எதிர் கொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் பாகிஸ்தானின் தலையெழுத்து வரும் ஞாயிறு அன்று நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்