தொடர்புடைய செய்திகள்
- ஓய்வுபெறும் சட்டத்திற்கு எதிர்ப்பு - பிரான்சில் வெடித்தது வன்முறை
- கூகுளில் தன்னை தேடிய அதிகாரிக்கு மரண தண்டனை: வடகொரிய அதிபரின் கொடூர தண்டனை!
- கூகுள் பேவில் நூதன மோசடி.. தமிழக காவல்துறை எச்சரிக்கை..!
- 1000 மொழிகளில் AI தொழில்நுட்பம்: கூகுளின் மாஸ் திட்டம்!
- சென்னையில் அரசு பேருந்து ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்.. பேருந்து சேவை முடங்குமா?
எங்கள் குரல்களுக்கு மதிப்பில்லை.. சுந்தர் பிச்சைக்கு கூகுள் தொழிலாளர்கள் கடிதம்..!
எங்கள் குரல்களுக்கு மதிப்பில்லை என்று கூகுள் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூகுள் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மிகப்பெரிய வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும் தற்போது இரண்டாம் கட்ட வேலை நீக்க நடவடிக்கையும் எடுக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கூகுள் பணியாளர்கள் இணைந்து சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதியுள்ளனர்
அதில் புதிதாக ஆட்களை எடுப்பதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்றும் ஏற்கனவே வேலை செய்து வரும் ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் கூகுள் பணியாளர்களுக்கு குழந்தைகளை பராமரிக்க விடுமுறைகள் விடப்பட வேண்டும் என்றும் உக்ரைன் போன்ற நாடுகளில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை எடுத்துள்ளனர்.
ஆனால் தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்றும் தங்களது குரல்கள் போதுமான அளவுக்கு கருத்தில் கொள்வதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தொழிலாளர்கள் ஆகிய நாங்கள் ஒன்றாக இணைந்து வலுவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Edited by Siva
