1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Fleeing in Prison Many Prisoners Kill A Strange Event

சிறைச்சாலையில் அடிதடி : கைதிகள் பலர் கொலை - திடுக்கிடும் சம்பவம்

சிறைச்சாலை
தஜிகிஸ்தான் நாட்டில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட கலவரத்தில் பலர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஜிகிஸ்தான் நாட்டில் உள்ள பிரலமான சிறையில் ஏற்பட்ட கலவரத்தில்  32 பேர் கொல்லப்பட்டனர்.

தலைநகர் துஷான்பேவுக்கு அருகில் உள்ளது வாக்டட் சிறை. அங்கு 1500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
 
இந்தக் கைதிகளில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினரும் உள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆயினும் ஞாயிற்றுக் கிழமை அன்று 3 காவலர்கள் மற்றும் ஐந்து கைதிகளை ஐ எஸ் தீவிரவாதிகள் கொலை செய்ததால் அங்கு கலவரம் ஏற்பட்டது.
 
இதனையடுத்து  சிறைப் பாதுகாவலர்கள் அங்கு கலவரத்தை அடக்க முயன்றனர். ஆனால் கட்டுக்கு மீறிய மோதலால் வீரர்கள் துப்பாக்கிச்சூடு  நடத்தினர்.
 
இதில் 24 கைதிகள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தற்பொழுது விசாரணை நடைபெற்றுவருதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த கட்டுரையில்
செந்தில் பாலாஜியின் டோக்கன் சிஸ்டம் எடுபடவில்லை - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்